ரவியும் ராதாவும் காதல் மணம் புரிந்த இளம் தம்பதிகள்ரவிக்கு கோயில் செல்லும் பழக்கம் இல்லைராதா அபிராமியை வணங்காமல் தன் நாளை துவக்குவது இல்லைரவி மிகவும் நிதானம்ராதா எதிலும் வேகம்ரவி பொறுமைராதா பட்டாசுசட்டென்று கோபப்படுவாள்ரவியின் ஜோக்கை கேட்டு களுக்கென சிரிப்பாள்கோபம் நொடியில் பஞ்சாய் பறந்து விடும்.ராதாவுக்கு இளகிய மனம்குழந்தை உள்ளம்ரவி அவளை தன் மகளை போல் காத்தான்இவர்களின் வாழ்க்கை தென்றல் போல இதமாய் நகர்ந்தது.

திருமணம் முடிந்து வருடத்துக்கு பின் ராதா கருவுற்றாள்இருவரும் மகிழ்ந்தனர்குழந்தைக்கான பொம்மைகள்தொட்டில்உடைகர்ப்பகாலம் பற்றிய புத்தகங்கள் என ஷாப்பிங் பட்டியல் தலைகீழாய் மாறியதுஅன்று காலை டாக்டரை பார்க்க இருவரும் கிளம்பினர்ஸ்கேன் பரிசோதனை முடிந்ததுடாக்டர் கரு வளரவில்லைகலைந்துவிட்டது என்றார்ரவியின் கண்கள் கலங்கின. ‘டாக்டர்நாங்க ஏதாவது தப்பு பண்ணிட்டோமா?’ என மெல்லிய குரலில் வினவினான். ‘இல்லைமுதல் trimesterல் 20% கரு கலைவது நார்மல்கவலை வேண்டாம்நீங்கள் சீக்கிரம் மறுபடியும் கருதரிப்பீர்கள்‘ என்று ஆறுதல் சொன்னார்ராதாவின் மனம் அதிர்ச்சியில் உறைந்து போனது.

ஒரு வார விடுப்புக்கு பின் அவள் வழக்கம் போல் அலுவலகம் சென்றாள்.ஆனால் பழைய உற்சாகம் அவளிடம் இல்லைஅன்று ஞாயிற்றுக்கிழமை.ராதா சோபாவில் அமர்ந்து டிவியில் மனம் லயிக்காமல் சேனல் மாற்றிக்கொண்டே இருந்தாள்ரவி அவள் அருகே அமர்ந்துஅவள் உள்ளங்கையை வருடியபடி, “டார்லிங்நம்ம லீவு போட்டு கோயில் ட்ரிப் போகலாமா?” என்றான்ராதாவுக்கு ஆச்சர்யம்கோயில்பூசை என்றால் ஓடி ஒளியும் என் ரவியா இது என மலைத்தாள்உடனே உற்சாகமாய், ‘கும்பகோணம் போகலாமா?’ என்றாள்இருவரும் காரில் கும்பகோணம் கிளம்பினர்ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கினர்ஒப்பிலியப்பன்,திருவாஞ்சியம்கல்பரக்ஷாம்பிகை என ராதா பட்டியல் வைத்து தரிசனம் செய்தாள்ஒரு மதிய வேளைஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.

சாப்பிட்டு முடித்ததும் மேசையில் இருந்து எழும் போது ஒரு சிறுவன் அவர்கள் சாப்பிட்ட இலையை எடுத்தான்ராதா, ‘ரவிசின்ன பிள்ளை இலை எடுக்குது ! ‘ என பதறினாள்பால் மணம் மாறாத அச்சிறுவனின் முகத்தையும்,கண்ணீர் கன்னங்களில் வழிய நின்ற ராதாவையும் ரவி மாறி மாறி பார்த்தான்.உடனே சுதாரித்து, ‘வா டார்லிங்போகலாம்‘ என அவள் கையை பிடித்தான்.அவள், ‘ ரவிவெயிட் அவன் கையிலே டிப்ஸ் கொடுத்துட்டு வர்றேன்என்றாள்ரவி, ‘வேண்டாம்நீ கொடுக்கும் 50 ரூபாயால் அவன் அடிபடுவான்.அவனிடம் இருந்து பிடுங்குவார்கள்‘ என்று சற்று அழுத்தமாக அவள் கையை பிடித்து வெளியேறினான்.

அவள் வாயடைத்து செய்வது அறியாமல் அவனுடன் காருக்கு திரும்பினாள்.அவள் முகம் வாடி இருந்தது. ‘நான் அந்த பையன் ஸ்கூலுக்கு போக ஏற்பாடு செய்கிறேன்வழக்கம் போல் நீ மழலையர் இல்லத்துக்கு பணம் அனுப்பும் போது 500 ரூபாய் சேர்த்து அனுப்பும்மா‘ என்றான் ரவிராதாவின் முகம் திருப்தியில் மலர்ந்ததுசற்று நேரத்தில் உறங்கி போனாள்.

குழந்தையான ராதா சட்டென தாய் ஆனதை உணர்ந்த ரவி நிச்சயம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் ஊர் திரும்பினான்.

சில மாதங்களுக்கு பின் ஓர் நாள் ரவி, ‘அந்த கும்பகோணம் பையன் பெயர் ஜெசுஅப்பா இல்லைஅவன் அம்மாவுக்கு வருமானத்துக்கு தையல் மெஷின் வாங்கி கொடுத்திருக்கேன்கார்மெண்ட்ஸ் கடையில் வேலை பார்த்தது போக,வீட்டில் தைத்து சம்பாதிப்பார்ஜெசு ஸ்கூலுக்கு போறான்சந்தோஷமா டார்லிங் ?’ என்றான்அவள் முகமலர்ந்துதாங்கியூ ரவிஉங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ!’ என ஒரு பேப்பரை நீட்டினாள்படித்ததும் அவளை அள்ளி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்கர்ப்ப பரிசோதனை ரிப்போர்ட் அது.

படம்Blessed Virgin Mary & Child by Philip Kosloski with creative commons license